அமெரிக்காவிலுள்ள வீடொன்று உறைபனியினால் முற்றாக மூடப்பட்டிருப்பதை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம்பிடித்துள்ளார். நியூ யோர்க் மாநிலத்தில் ஒன்டரியோ ஏரிக்கு அருகில் இவ்வீடு உள்ளது.
கடும் குளிரான காலநிலைக்கு மத்தியில் இந்த வீட்டை முற்றிலும் உறைபனி மூடியிருந்தது. கடந்த வாரம் இவ்வீட்டை படம்பிடித்த ஜோன் குக்கோ இது தொடர்பாக கூறுகையில், இப்படம் உண்மையானது என நம்புவதற்கு சமூக வலைத்தளங்களிலுள்ள பலர் மறுக்கின்றனர்.
நான் முழு வீட்டின் மீதும் ஏதோ நுரையை தெளித்துவிட்டேன் என அவர்கள் கருதுகின்றனர். எனத் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் கடந்த வாரம் பனிப்புயல் காரணமாக 200,000 பேர் மின்சாரத்தை இழந்திருந்தனர். இவ்வார முற்பகுதியிலும் பல்லாயிரக் கணக்கானோருக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.