இன்று (20.03.2017) மாலை 4.30 மணியளவில் பூணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவாறு மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பட்டா வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
கல்குனாமடு பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன என்பவரே பலியான சாரதி என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தானது சாரதி தூக்க மயக்கத்தில் மரத்துடன் மோதியதால் இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.