சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, பயங்கரவாதச் சட்டத்தை இரத்துச் செய் ஆகிய தமிழ் பேசும் மக்களின் முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி சமவுரிமை இயக்கம் முன்னேடுக்கும் போராட்டத்திற்கு புதிய ஜனாநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தன்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இப் போராட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் போராட்டக்கரர்களுக்கு ஆதரவு வழங்கினர். அத்துடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் தன்னுடைய ஆதரவை தெரிவித்தது.











