9 மாணவர்களுடன் மாணவன் செலுத்திச் சென்ற கார் கொழும்பு கறுவாத் தோட்டத்தில் விபத்து!!

466

கொழும்­பி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் மாணவர் ஒரு­வ­ரினால் அதி­வே­க­மாக செலுத்­தப்­பட்ட மொண்­டெரோ ரக காரொன்று கறு­வாத்­தோட்டம் விளை­யாட்டு மைதானத்­துக்கு அருகில் குடை­சாய்ந்து விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது குறித்த காரி னுள் பாட­சாலை மாண­வர்கள் 10 பேர் பய­ணித்­துள்ள நிலையில் அதில் மூவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­ற­னர்.

கொழும்பின் பிரபல பாட­சா­லையின் வரு­டாந்த கிரிக்கெட் போட்­டிக்கு ஆத­ரவு தெரி­விக்கும் முக­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த வாகன ஊர்­வ­ல­மொன்றில் கலந்து கொண்ட காரொன்றே இவ்வாறு விபத்துக்கு ள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.