உயிருள்ள மீன்களை குதத்தில் நுழைத்துக் கொண்ட நபர் : குடலுக்குள் மீன் சென்றதால் வைத்தியசாலையில்!!

636

நபர் ஒருவர் தனது குதத்தில் உயி­ருள்ள இரு மீன்­களை நுழைத்துக் கொண்­ட­தை­ய­டுத்து, அம் மீன்கள் அந்­ ந­பரின் குட­லுக்குள் ஊடு­ரு­விய நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

45 வய­தான இந்­ நபர், அதிக மது­போ­தையில் இருந்­த­வே­ளையில், இரு சிறிய மீன்­களை தனது குதத்தில் நுழைத்­துக்­கொண்டார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உயி­ரு­ட­னி­ருந்த மேற்­படி மீன்­களில் ஒன்று, அந் ­ந­பரின் குடலை சென்­ற­டைந்­தது. இதனால் கடு­மை­யான வயிற்­று­வ­லி­யினால் பாதிக்­கப்­பட்ட மேற்­படி நபர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

சீனாவின் தென் பிராந்­தி­யத்­தி­லுள்ள குவாங்ஸோ நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்றின் வைத்­தி­யர்கள் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மேற்­படி மீன்­களை அந் ­ந­பரின் வயிற்­றி­லி­ருந்து அகற்­றினர்.

24 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேலாக மேற்­படி மீன்கள் அந்­ ந­பரின் வயிற்­றுக்குள் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இம் ­மீன்­களில் ஒன்று 4 அங்­குல நீளமும் 0.8 அங்­குல அக­லமும் உடை­யது என மருத்­துவர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இம்­ மீன்கள் வேறு உறுப்புக்களை அடைந்திருந்தால் அந் நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அம் மருத்துவர் கூறியுள்ளார்.