தனுஷின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது : அதிர்ச்சித் தகவல்!!

465

நடிகர் தனுஷ் தனது உடலில் உள்ள அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சையின் மூலம் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர், மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மனு தாக்கல்செய்தனர்.

இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சமர்பிக்கப்பட்டது.

மருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக மருத்துவ அறிக்கை கருதப்படுகிறது. மேலும் விரிவான விசாரணை வரும் 27ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.