ரஷ்ய பெண்களால் இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்ட பேராபத்து!!

344

ரஷ்யாவை சேர்ந்த இரு பெண்கள், இலங்கையிலுள்ள பல ஆண்களுக்கு எச்ஐவி நோயினை பரவச் செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது,

பதுளை எல்ல சுற்றுலா பகுதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை பெற்ற ஒரு பிரதேசமாகும். அந்தப் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண்கள் இருவர் எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அந்தப் பகுதியின் சுற்று சூழல் ஆராய்வதற்காக வருகைத்தந்துள்ளதாக கூறி, அங்கிருந்த ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

இதன்போது குறித்த இரு பெண்களும் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் இவர்களின் மாய வலைக்குள் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எல்ல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது, எச்ஐவி நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 27 இளைஞர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் திருமணம் செய்தாவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

உயிர்காவி நோயினை இளைஞர்களுக்கு பரப்பிய ரஸ்ய பெண்கள், இலங்கையை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.