வவுனியாவில் 153வது பொலிஸ் வீரர்கள் தினம்!!

213

 
வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (21.03.2017) காலை 7.30 மணிக்கு உயிர் நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 153வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரத்ன விஜயமுனி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியாவிலுள்ள ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உயிர்நீத்த பொலிசாரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், என பலரும் கலந்து கொண்டனர். உறவினர்கள் உயிர்நீத்த பொலிசாருக்க மலர் அஞ்சலி செலுத்தினர்.

யுத்தத்தின்போது 2540 பொலிசார் உயிரிழந்ததுடன் 2017 வரையான காலப்பகுதியில் 3111 பொலிசார் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.