இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணிற்கு நடு வீதியில் நேர்ந்த அவலம்!!(வீடியோ)

228

இலங்கையின் அபிவிருத்திற்கு சுற்றுலாத்துறை என்பதும் பிரதான காரணம். எனினும் அனைத்து வகையிலும் அது சரியாக நடைபெற்று வருகின்றதா என்பது கேள்விக்குறிதான்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரையும் அவருடன் வந்த ஒருவரையும் இலங்கைச் சாரதி ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்டி நடு வீதியில் இறக்கி விட்டு செல்லும் காணொளி தற்போது வேகமாக பரவி வருகின்றது.

குறித்த காணொளியில் 4500 ரூபாய் வாடகைப் பணத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டு 3500 ரூபாய் மாத்திரம் வழங்கியதாக கூறி சுற்றுலாப் பயணிகளை நடு வீதியில் இறக்கி விடப்படுகின்றனர்.

எனினும் “தாம் அவ்வாறு கூறவில்லை உங்களது வியாபாரம் மிக நன்றாக இருக்கின்றது” என வெளிநாட்டு பெண் பயணி கூறுகின்றார்.

அவரது சொற்களை செவிமெடுக்காத இலங்கை சாரதி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுமாறு கூறி அங்கிருந்து சென்று விடுகின்றார்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது வேகமாக பரவி வருகின்றது. இதில் எவர் சரி எவர் பிழை என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் கூட.,

இது இலங்கை தொடர்பில் ஒரு தவறான கண்ணோட்டம் எழுப்பப்படும் என்பது மட்டும் நிச்சயம். இதனால் குறித்த இலங்கை சாரதி தொடர்பில் பல்வேறு வகையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் இலங்கை தொடர்பில் தவறான பார்வை பதியப்படும் என்பது மட்டும் உண்மையே.

மனிதத்துவம் வாழும் போது அந்த நாடும் முன்னேற்றமடைந்து செல்லும் என்பதனை கவனத்தில் எடுத்து எம் நாட்டு மரியாதையை நாம் காக்க வேண்டியது இலங்கையர்களின் கடமை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.