8 நாடுகளின் பயணிகள் மின்னனு சாதனங்களை விமானங்களில் எடுத்துச் செல்லத் தடை!!

341

எட்டு மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களில், விமானிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணிணினி மற்றும் டேப்லட் போன்ற மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கை 10 விமான நிலையங்களில் இயங்கும் ஒன்பது விமான சேவைகளை பாதிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் உளவுத் துறையால் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் மின்னனு சாதனங்களான மடிக்கணினி, கையடக்க அகல்திரை, புகைப்பட கருவி, இருவட்டு சாதனம் மற்றும் மின்னனு விளையாட்டு பொருட்கள் ஆகியவை அடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அலைபேசிகள் மற்றும் தொடுதிரை அலைபேசிகளை தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

உள்நாட்டு பாதுகாப்பு துறை, இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்த புதிய தடை கடந்த சில வாரங்களாகவே பரிசீலனையில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.