வடமேல் மாகாண தேர்தலை மீள நடத்தக் கோரி உண்ணாவிரதம்!!

455

North_Western_Sri_Lanka_districts

வடமேல் மாகாண சபை தேர்தலை மீண்டும் நடத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டமொன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்தே புத்தளம் மாவட்டத்திற்கான மாகாண சபை தேர்தலை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை முன்வைத்து புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகின்றது.



இந்த போராட்டத்தினை ஜனசெத பெரமுன மேற்கொண்டுள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக புத்தளம் மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.