கம்பஹா திரையரங்கில் ஜோடியாக சினிமா பார்த்த பாடசாலை மாணவ மாணவிகள் 48 பேர் சிக்கினர்!!

240

கம்பஹா நகரிலுள்ள திரையரங்கு ஒன்றில் ஜோடி, ஜோடியாக சினிமா பார்த்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் 48 பாடசாலை மாணவ, மாணவிகள் கம்பஹா பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு கம்பஹா நகருக்கு வந்து திரையரங்குகளுக்கு சென்று சல்லாபித்துக் கொண்டிருந்தபோதே சனிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா பொலிஸார் மாணவ மாணவிகளின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து மாணவ மாணவியரை கடுமையாக எச்சரித்த பின்னர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.