காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்!!

578

தற்போது உலகத்தில் எந்த விடையங்கள் வித்தியாசமாக காணப்பட்டாலும் அல்லது வித்தியாசமாக செயற்பட்டாலும் அவை அனைத்தையும் பற்றி அதிகளவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றன.

அந்தவகையில், மூன்று கண்களுடன் பிறந்த கன்றுகுட்டி , கால்கள் ஊனமாக பிறந்த ஆட்டுக்குட்டி, நான்கு கிளைகளுடன் தென்னை மரம், பனை மரம் போன்ற செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தற்போது வாழை மரம் ஒன்றின் இடை நடுவில் வாழைக்குலை முளைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

காரைத்தீவு 5 ஆம் பிரிவில் உள்ள ஒருவரின் வீட்டிலேயே குறித்த மரத்தில் வித்தியாசமாக வாழை குலை வந்துள்ளது.

வழக்கமாக வாழை மரம் ஒருதடவை மட்டுமே தான் குலை போடுவதுடன், அதன் ஆயுள் காலமும் அத்துடனேயே முடிவடைந்து விடும்.

ஆனால் இந்த மரமானது வித்தியாசமாக காணப்படுகின்றமையினால் அவற்றினை காண்பதற்காக பலர் அந்த வீட்டிற்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.