வீதிகளில் நாய்களை விட்டுச் செல்பவர்களுக்கு 25,000 ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை!!

301

வீதிகளில் நாய்களை கைவிட்டுச் செல்வோருக்கு 25,000 ரூபா அபராதமும் 02 வருட சிறைத்தண்டனை வழங்குவது குறித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீதிகளில் நாய்களை விட்டு செல்வதனால் மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அந்தவகையில் வீதிகளில் நாய்கள் மற்றும் மிருகங்களைக் கைவிட்டு செல்வோருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன் அதனை கட்ட மறுக்கும் பட்சத்தில் 02 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்டும்.