மலேசியாவில் பெண்களிடம் சேட்டை காட்டிய இலங்கையர் கைது!!

366

மலேசியாவில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் கடந்த திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணிபுரியும் 51 வயது பெண் ஊழியர் ஒருவரை தாக்கி, அவரது கையடக்க தொலைபேசி, பணம் மற்றும் கடன் அட்டையை கொள்ளையடித்துள்ளார் என இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றது. தாக்குதலுக்கு இலக்கான பெண், கடும் காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, குறித்த இலங்கையர் மின்னியல் தொழிற்சாலையில் பணிபுரியும் 27 வயது பெண் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்த 27 வயது பெண்ணிடம் இலங்கையர் பாலியல் சேட்டை புரிந்ததுள்ளார். இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து குறித்த பெண் உரத்து சத்தமிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சந்தேகநபர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். இந்த நிலையிலேயே தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குறித்த இலங்கையர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.