இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவர் வெறும் 23 அங்குல உயரமானவராக காணப்படுகிறார். அவரை கடவுளின் அவதாரம் என பலர் வழிபட்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மன்பிரீட் சிங் எனும் இந்த இளைஞர் 6 மாத குழந்தையின் உயரத்தில் காணப்படுகிறார்.
உலகில் மிகக் குறைந்த உயரமுடைய நபர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரின் எடை 6.8 கிலோகிராம் ஆகும்.
6 மாத வயதின்பின்னர் மன்பரீட் சிங்கின் வளர்ச்சி நின்றுவிட்டதாக அவரின் பெற்றோரான ஜக்தார் சிங், மன்ஜித் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மன்பரீட் சிங்குக்கு 12 வயதானபோது அவரை கடவுளின் அவதாரமாக கருதி கிராமவாசிகள் வழிபடத் தொடங்கினராம்.
வறியவர்களான மன்பரீட் சிங்கின் பெற்றோர், தமது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் போதிய பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
“பல மருத்துவர்களிடம் அவ நாம் காண்பித்தோம். ஆனால், தை ரோயிட் பாதிப்பின் காரணமாக மன்பரீட் சிங்கின் வளர்ச்சி நின்றுவிட்டது எனவும், இந்நிலையை குணமாக்க முடியாது எனவும் கூறினர்” என ஜக்தார் சிங், மன்ஜித் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.