23 அங்­குல உய­ரத்தில் 21 வயது இளைஞன் கட­வுளின் அவ­தா­ர­மாக வழி­படும் கிராம மக்கள்!!

348

 
இந்­தி­யாவைச் சேர்ந்த 21 வய­தான இளைஞர் ஒருவர் வெறும் 23 அங்­குல உய­ர­மா­ன­வ­ராக காணப்­ப­டு­கிறார். அவரை கட­வுளின் அவ­தாரம் என பலர் வழி­பட்டு வரு­கின்­றனர்.

பஞ்சாப் மாநி­லத்தைச் சேர்ந்த மன்­பிரீட் சிங் எனும் இந்த இளைஞர் 6 மாத குழந்­தையின் உய­ரத்தில் காணப்­ப­டு­கிறார்.

உலகில் மிகக் குறைந்த உய­ர­மு­டைய நபர்­களில் ஒரு­வ­ராக இவர் கரு­தப்­ப­டு­கிறார். இவரின் எடை 6.8 கிலோ­கிராம் ஆகும்.

6 மாத வய­தின்­பின்னர் மன்­பரீட் சிங்கின் வளர்ச்சி நின்­று­விட்­ட­தாக அவரின் பெற்­றோ­ரான ஜக்தார் சிங், மன்ஜித் சிங் ஆகியோர் தெரி­வித்­துள்­ளனர்.

மன்­பரீட் சிங்­குக்கு 12 வய­தா­ன­போது அவரை கட­வுளின் அவ­தா­ர­மாக கருதி கிரா­ம­வா­சிகள் வழி­படத் தொடங்­கி­னராம்.

வறி­ய­வர்­க­ளான மன்­பரீட் சிங்கின் பெற்றோர், தமது மக­னுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்குப் போதிய பணம் இல்லை எனத் தெரி­வித்­துள்­ளனர்.

“பல மருத்­து­வர்­க­ளிடம் அவ நாம் காண்­பித்தோம். ஆனால், தை ரோயிட் பாதிப்பின் கார­ண­மாக மன்­பரீட் சிங்கின் வளர்ச்சி நின்­று­விட்­டது எனவும், இந்­நி­லையை குண­மாக்க முடியாது எனவும் கூறினர்” என ஜக்தார் சிங், மன்ஜித் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.