சவுதியில் மூன்று தமிழர்கள் உயிரிழப்பு!!

515

சவுதி அரேபியாவில் மூன்று தமிழக மீனவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த கேசவன்புத்தந்துரை மற்றும் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் சுகந்தன், நெவில் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்று பேரும் சவுதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வெளிநாட்டு கப்பல் இவர்களது படகின் மீது மோதியுள்ளது.

இதில் படகு நொறுங்கி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உடல்களை கண்டுபிடித்து தருமாறு மூன்று பேரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசும், மத்திய அரசும் தூதரகங்கள் மூலம் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.