இலங்கைப் பெண்ணொருவர் பெங்களூரில் கைது!!

278

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த இலங்கை பெண் ஒருவர் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

64 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருளுடன் 39 வயதுடைய இலங்கை பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண் கொழும்பில் இருந்து பெங்களூர் ஊடாக சென்னை செல்ல முற்பட்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையிலிருந்து வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 01 கிலோ 640 கிராம் நிறையுடைய ஹேசிஸ் என்ற போதைப் பொருள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.