வவுனியாவில் 32 பேருக்கு பன்றிக்காய்ச்சல் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

776

வவுனியாவில் கடந்த சில தினங்களில் 32பேருக்கு இன்புளுவன்சா (H1N1) தொற்று எற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது..

வவுனியாவில் இன்புளுவன்சா தொற்றுக் காரணமாக இதுவரை 32 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் 20 பேர் வரையில் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர். ஏனையோர் வைத்தியசாலையில் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தொற்று ஏற்பட வாய்புக்கள் உள்ளதால் சிறியவர்களை தேவையின்றி வைத்திய சாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்கவும். குறிப்பாக கற்பிணித்தாய்மார், சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள, சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முககவசம் அணிந்து இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை, இன்புளுவன்சா வைரஸ் தொற்று காரணமாக அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது