வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறு வியாபாரிகள் சிரமதானம்!!

661

 
வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடடிக்கையின் ஒரு பகுதியாக வவுனியா சிறு வியாபாரிகள் சங்கமும் வவுனியா பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சிரமதான பணியில் இன்று (23.03.2017) காலையில் ஈடுபட்டனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சிறு வியாபார கடைப் பகுதிகளிலேயே இச் சிரமதானப் பணிகள் வவுனியா சிறு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யு.அயூப் கான் தலைமையில் நடைபெற்றது. சிறு வியாபாரிகளின் கடைத்தொகுதி உரிமையாளர்கள் ஊழியர்கள் இச் சிரமதானப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கு தண்டப்பணம் அல்லது வழக்கு தாக்கல் செய்யப்படும் என வவுனியா சுகாதாரப்பனிமனையின் பொது சுகாதார பரிசோதகர் மே.ஜெயா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.