வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் மீது தாக்குதல் : ஐவர் வைத்தியசாலையில்!!

284

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நேற்று (23.03.2017) மாலை வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் இரவு 10.30 மணியளவில் அனுராதபுரத்தினை அண்மித்தது.

இதன் போது கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் இ.போ.ச. பஸ்ஸிற்கும் இடையே போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம் உலுக்குளம் பகுதியில் வைத்து இ.போ.ச. பஸ்ஸை தனியார் பஸ் முந்திச் சென்ற 2 நிமிடங்களில் இ.போ.ச. பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் இ.போ.ச. பஸ்ஸின் சாரதி உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.