4 வருடங்களாக அறைக்குள்ளேயே பூட்டி கொண்டிருந்த தாய், மகள் : அதிர வைக்கும் காரணம்!!

283

இந்தியாவில் 4 வருடங்களாக அறைக்குள்ளேயே தங்களை பூட்டிக் கொண்டிருந்த தாய் மற்றும் மகளை பொலிசார் மீட்டுள்ளனர்.

டெல்லி மஹாவீர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்தே 42 வயதான கலாவதி மற்றும் 20 வயதான அவரது மகள் தீபாவை பொலிசார் மீட்டுள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலை அடுத்து பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்த இருவரையும் மீட்டுள்ளனர்.

மேலும், இவர்களுடன் கலாவதியின் மாமனார் மகாவீர் மிஷ்ரா என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் மகாவீர் மிஷ்ரா, 2000ம் ஆண்டு தன மனைவி மரணமடைந்தார். தனது 2 மகன்களும் 4 வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் பலியாகி விட்டனர்.

அன்று முதல் கலாவதி மற்றும் தீபா இருவரும் அறைக்குள்ளேயே தங்களை பூட்டி கொண்டு இருந்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

தனக்கு கிடைக்கும் ஒய்வூதிய தொகையை வைத்து இருவருக்கும் உணவு வழங்கி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.