பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது!!

506

15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 16 வயதான இளைஞனை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஸ்கெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் வசித்து வரும் பாடசாலை மாணவியை பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையிலேயே இளைஞனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் மாணவி மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.