33 வருடங்களின் பின் கிடைத்த தாய் : வெளிநாட்டு மகனுக்கு இன்ப அதிர்ச்சி!!

253

33 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் தனது சொந்த தாயை தேடி இலங்கை வந்துள்ளார். புலத்சிங்கள பகுதியை சேர்ந்த குணவத்தி லியனகே என்ற தாயை தேடி, சுவீடன் நாட்டிலிருந்து அவரது மகன் வந்துள்ளார்.

தனது தாயை தேடி கண்டுபிடிப்பதற்காக புலத்சிங்கள பொலிஸாரின் உதவியை குறித்த இளைஞன் நாடியுள்ளார். பொலிஸார் அந்த இளைஞனுக்கு தனது பெற்றோரை சந்திப்பதற்கு நடவடிக்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இலங்கையினுள் வாழும் போது நிஹால் லியனகே என அழைக்கப்பட்ட அவர் தற்போது நிக்லஸ் பீட்டர்ஸன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த ஒன்றரை வயதான நிஹால், சுவீடன் தம்பதியான போ மற்றும் ப்ரிட் மரி தத்து கொடுக்கப்பட்டதாக, இளைஞரின் தாயாரான குணவத்தி லியனகே தெரிவித்துள்ளார்.

தந்தையின் கவனயீனம் காரணமாக அவரது தாயாருக்கு ஏற்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில், கணவரை கைவிட்டு புலத்சிங்கள பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார்.

தன்னால் பார்த்துக் கொள்ள முடியாத மகனை சுவீடன் நாட்டு தம்பதியினருக்கு சட்டரீதியாக வழங்கியுள்ளார். இன்று இந்த இளைஞர் சுவீடனில் பொறியியலாளராக செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் உண்மையான பெற்றோரின் விபரங்களை சுவீடன் தம்பதியினர் வழங்கியுள்ளனர். இலங்கையில் இருந்து செல்வதற்கு முன்னர் தாயாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் குறித்த இளைஞர் இலங்கை வந்துள்ளார்.

புலத்சிங்கள சென்ற இனைஞன் பொலிஸ் நிலையத்தில் தகவல் அறிவித்தார். உடனடியாக செயற்பட்ட பொலிஸார் இது தொடர்பில் தகவல் ஆராய்ந்து அந்த இளைஞர் மற்றும் தாயாரை சந்திப்பதற்கு உதவியுள்ளனர்.

33 வருடங்களுக்கு முன்னர் இழந்த தனது தாயின் அன்பை மீண்டும் குறித்த இளைஞர் பெற்ற சந்தர்ப்பத்தில் அனைவரின் கண்களும் கண்ணீர் வடிந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை 32 வருடங்களுக்கு பின்னர் தனது சொந்த பெற்றோரை தேடி சுவீடனிலிருந்து பெண்ணொருவர் இலங்கை வந்திருந்தார். எனினும் அவரி்ன் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.