வவுனியாவில் கடந்த 29 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (24.03.2017) 29வது நாளாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.