ஒன்றாக மது அருந்திவிட்டு நண்பனை கொலை செய்தவர் கைது!!

234

கூரிய ஆயுதத்தால் தாக்கி நண்பர் ஒருவரை கொலை செய்த சந்தேகநபர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை, மிமனபலான பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றின் பின்பக்கத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவர் ஒன்றாக சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து ஒருவர் மற்றொருவரை கொலை செய்யதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரால், கழுத்துப் பகுதிக்கு கூரிய ஆயுதத்தால் தாக்கி நண்பரை கொலை செய்துள்ளதுடன், சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரும் அதே விட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்த ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.