வவுனியாவில் துவக்கு வெடித்ததில் காயமடைந்தவர் வைத்தியசாலையில்!!

337

வவுனியா பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியில் இன்று (25.03.2017) மதியம் 2 மணியளவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியிலுள்ள வயல் வெளிக்கு சென்ற மஞ்சுல பிரசன்ன குமார என்ற 29 வயது இளைஞர் அங்கு விலங்குகளுக்கு வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கியில் அகப்பட்டு காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடத்தில் கட்டுத்துவக்கு வைத்தது யார் என பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.