இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஒருவரிடம் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணை நடத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினர் லக்ஷ்மன் டி சில்வா உறுதிபடுத்தி உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து அவருக்கு ஏற்படுத்தப்பட்ட தொலைபேசி அழைப்பு ஒன்று தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் தோல்வியை அடுத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.