வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்!!

304

 
வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இன்று (26.03.2017) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிவோருக்கு வதிவிடங்களை அமைப்பதற்காக ஓமந்தை பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு மன்னர் காணிகள் வழங்கப்படடிருந்தது.

சுமார் 700 அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போதுவரை 65 குடும்பங்களே அங்கு குடியேறியுள்ளனர்.

இந் நிலையில் மக்கள் குடியேறாத காணிகள் பற்றைக்காடுகளாக காப்படுவதனால் காட்டு விலங்ககளின் ஆபத்து காணப்படுவதாகவும், தமது குடிமனைகளுக்கான வீதிகள் செப்பனிடப்படவில்லை எனவும் வீதி மின் விளக்ககள் பொருத்தப்படவில்லை எனவும் மக்கள் குடியோக காணிகள வேறு உத்தியோகத்தர்களுக்கு மாற்றி வழங்ககோரியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுமார் 30 நிமிடங்கள் அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியாவாறு வீட்டுத்திட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நின்றிருந்தனர்.

இவர்களுடன் வன்னி பாராமன்ற உறுப்பினர்களான சிவக்தி ஆனந்தன், சி.சிவமோகன் ஆகியோர் நேரடியாக கலந்துரையாடியதுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் உறுதியளித்திருந்தனர். இதனையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.