வவுனியாவில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த சிரமதானம்!!

280

 
வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாறம்பைக்குளம் கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட மதினா நகர் பகுதியில் இன்று (26.03) மதினாநகர் பள்ளிவாசல் தலைவர் அ.முகமட் பைசர் தலைமையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மதினாநகர் பள்ளிவாசல் சுற்றுப்புறச் சுழல் மற்றும் கிராமத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடியதாக இனங்காணப்பட்ட இடங்கள் அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டது.

பொது சுகாதார பரிசோதகர் ஏ.ஜெ.எர்சன் ஜோய் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும் கிராம உத்தியோகத்தர் சி.ரவீந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சிரமதானப்பணியினை மகாறம்பைக்குளம் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஜெயராம் துர்க்கா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பார்வையிட்டிருந்ததுடன் அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தனர்.