13 வயது மாணவியை கூட்டாக பலாத்காரம் செய்த 8 ஆசிரியர்கள்!!

537

இந்தியாவில் 13 வயதான மாணவி ஒருவரை 8 ஆசிரியர்கள் கூட்டாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள Nokha என்ற நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பெயர் வெளிடப்படாத மாணவி ஒருவர் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு மாணவி மீது மோகம் கொண்ட சில ஆசிரியர்கள் வகுப்பு முடிந்ததும் மாணவியை மட்டும் காத்திருக்குமாரு கூறியுள்ளனர்.

பின்னர், சக மாணவ, மாணவிகள் வெளியே சென்றதும் வகுப்பறையை மூடிவிட்டு மாணவியை ஆசிரியர்கள் மிரட்டியுள்ளனர். ஆசிரியர்களின் மிரட்டலுக்கு அச்சப்பட்ட மாணவியை 8 ஆசிரியர்கள் துடிக்க துடிக்க பலாத்காரம் செய்துள்ளனர். இக்காட்சிகளை ஒரு ஆசிரியர் வீடியோவும் எடுத்துள்ளார்.

பின்னர், இந்த வீடியோக் காட்சியை காட்டி மாணவியை மிரட்டிய ஆசிரியர்கள் அவரை தொடர்ந்து ஒரு வருடமாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

மாணவி கர்ப்பம் தரித்தபோது அதனை கலைக்க ஆசிரியர்கள் மாத்திரைகளையும் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு ரத்தப் புற்றுநோய் தாக்கியுள்ளது.

இந்த புற்றுநோயிற்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வரும்போது தான் தன்னை ஆசிரியர்கள் கூட்டாக பலாத்காரம் செய்த விடயங்களை அவர் வெளியே கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவியின் தந்தை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். மாணவியிடம் விசாரணை நடத்தியபோது நிகழ்ந்த சம்பவம் அனைத்தும் உண்மை என நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாணவியை பலாத்காரம் செய்த 8 ஆசிரியர்கள் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சரான Vasundhara Raje வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவியை குணப்படுத்த அரசாங்கம் சார்பில் இலவச சிகிச்சை அளித்து வருவதாகவும், கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.