மூதூரில் மீன் சாப்பிட்டவர்களில் ஒருவர் மரணம் : 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

838

food

மட்டகளப்பு , மூதூரில் பிரதேசத்தில் உணவு விசமானதில் ஒருவர் உயிரிழந்துடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது.

நேற்று விற்கப்பட்ட ஒருவகையான மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டவர்களே ஒவ்வாமை காரணமாக நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 16 பெண்கள், 4 சிறுவர்கள் மற்றும் 9 ஆண்களும் அடங்குவதாக மூதூர் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலிருந்த ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தற்போது சிகிச்சை பெற்றுவரும் 28 பேரும் ஆபத்தான நிலைமையில் இல்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.