தமிழகத்திலிருந்து காரிலேயே லண்டன் பயணிக்கும் 3 பெண்கள் : ஏன் தெரியுமா?

472

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக 3 பெண்கள் தமிழகத்தின் கோவையில் இருந்து கார் மூலம் லண்டன் செல்லும் பயணத்தை நேற்று தொடங்கியுள்ளனர்.

கோவை கல்வியறிவு இயக்கம் சார்பில் கோவையைச் சேர்ந்த 3 பெண்கள் தங்கள் பயணத்தை நேற்று தொடங்கினர். தமிழக நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேலுமணி காரை கொடியசைத்து பெண்களின் பயணத்தை தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், பெண்களுக்கு கல்வி வழங்குவது குறித்தும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பயணத்தை மேற்கொள்கிறோம். பெண்கள் படித்தால் அவர்கள் மூலம் ஒட்டுமொத்த அவரது குடும்பமே கல்வி அறிவு பெறுவர். அனைவரும் கல்வியறிவு பெறுவது என்பது நல்ல விடயம், இதற்காக நாங்கள் லண்டனுக்கு காரில் செல்கிறோம்.

உலகில் உள்ள எந்த இந்திய பெண்ணும் இன்னும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கியும் இருக்கக் கூடாது என்றனர். மியான்மர், லோவோஸ், தாய்லாந்து, சீனா, ரஷ்யா. மத்திய ஐரோப்பா, போலந்து உள்ளிட்ட 24 நாடுகள் வழியாக லண்டன் சென்றடைய உள்ளனர்.

மொத்தம் 24,000 கி.மீ. தூரத்தை மொத்தம் 70 நாள்களில் கடக்கவுள்ளனர். அதாவது வரும் யூன் 5-ஆம் திகதி லண்டனை அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூவரும் ஒவ்வொரு நாட்டிலும் இறங்கி பெண் கல்வி குறித்த முக்கியத்துவத்தையும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.