வெள்ளவத்தை காலி வீதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் வசமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர் இன்றையதினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.