பாடசாலைக்குச் செல்வதற்குத் தாமதமானதால் மகனை ஹெலியில் அனுப்பி வைத்த தந்தை!!

800

யுக்­ரைனைச் சேர்ந்த அர­சி­யல்­வாதி ஒருவர், தனது மகன் உரிய வேளைக்குப் பாட­சா­லைக்குச் செல்­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அவனை ஹெலி­கொப்­டரில் அனுப்பி வைத்­துள்ளார்.

யுக்­ரைனின் தலை­நகர் கீவ் இலுள்ள பாட­சா­லையின் வெளி­யி­லுள்ள வாகனத் தரிப்­பி­டத்தில் தரை­யி­றங்­கிய ரொபின்சன் ஆர்22 பீட்­டார ரக ஹொலி­கொப்­ட­ரி­லி­ருந்து இச் ­சி­றுவன் வகுப்­பறை நோக்கி செல்­வதை சிலர் படம் பிடித்­துள்­ளனர்.

இச் ­சி­றுவன் யுக்­ரைனின் முன்னாள் விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்சர் அன்ட்ரே பெல்­செவ்ஸ்­கியின் மகன் எனக் கூறப்­ப­டு­கி­றது. இது தொடர்­பாக அன்ட்ரே பெல்­செவ்ஸ்கி கருத்துத் தெரி­விக்­க­வில்லை. ஆனால், ஹொலி­கொப்­டரில் மாண­வனை பாட­சா­லைக்கு அனுப்பி வைத்­தமை தொடர்­பாக சமூக வலைத்தளங்களில் பலர் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.