யுக்ரைனைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தனது மகன் உரிய வேளைக்குப் பாடசாலைக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக அவனை ஹெலிகொப்டரில் அனுப்பி வைத்துள்ளார்.
யுக்ரைனின் தலைநகர் கீவ் இலுள்ள பாடசாலையின் வெளியிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் தரையிறங்கிய ரொபின்சன் ஆர்22 பீட்டார ரக ஹொலிகொப்டரிலிருந்து இச் சிறுவன் வகுப்பறை நோக்கி செல்வதை சிலர் படம் பிடித்துள்ளனர்.
இச் சிறுவன் யுக்ரைனின் முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் அன்ட்ரே பெல்செவ்ஸ்கியின் மகன் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அன்ட்ரே பெல்செவ்ஸ்கி கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், ஹொலிகொப்டரில் மாணவனை பாடசாலைக்கு அனுப்பி வைத்தமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலர் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.






