வவுனியாவில் பொலிசாருக்கு விருது வழங்கும் நிகழ்வு!!

283

 
வவுனியாவில் பொலிசாருக்கு விருது வழங்கும் நிகழ்வு வவுனியா மற்றும் மன்னார் பிராந்தியங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (29.03.2017) வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் போதைவஸ்த்து, கொலை, கொள்ளை மற்றும் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்திய 48 பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசாக பணத்தொகை வழங்கப்பட்டது.

வவுனியா மன்னாரில் குற்றங்களை கட்டுப்படுத்திய மற்றும் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு 22 இலட்சம் ரூபா பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தனிநபருக்கான அதிகூடிய பணப்பரிசான 1 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய்களை வவுனியா மாவட்டத்தின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ஏ.டி.பிரசாத் ஸ்ரீவர்த்தன பிரதி பொலஸ் மா அதிபரின் கரங்களால் பெற்றுக்கொண்டார்.

அதே போல் அதி கூடிய பணப்பரிசான 5 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய்களை வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பெற்றுக்கொண்டது.

அத்துடன் இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளை வழங்கிய பாடசாலை மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிசார் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.