இந்தியா கொடுத்த தொடர் அழுத்தமே கூட்டமைப்பின் வெற்றிக்கு காரணம் : ஜி.கே.வாசன்!!

455

g.k. vasan

இலங்கையில் நடந்து முடிந்த வடக்கு மாகாண தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று உள்ளதை மனதார வரவேற்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது..

இந்த வெற்றிக்கு இந்திய அரசு தொடர்ந்து குரல் கொடுத்து அழுத்தம் தெரிவித்து வந்தது தான் காரணம். இந்த வெற்றிக்கு பிறகு ராணுவம் அங்கே இருப்பது முறையற்ற செயல். எனவே இலங்கையில் இருந்து ராணுவத்தை உடனே வெளியேற்ற வேண்டும்.

இலங்கை அரசு இதனை செய்யும் என நான் நம்புகிறேன். இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பும் உரிமையும் வழங்க வேண்டும்.



இதனை இலங்கை அரசு உடனே செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு அதில் ஒரு பகுதியினர் விடுதலை செய்யப்பட்டு உள்ளதும் ஒரு பகுதியினர் சிறையில் இருந்து வருவதும் வருத்தம் அளிக்கிறது. எனவே சிறையில் இருப்பவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு கையகப்படுத்தி வைத்திருப்பதை உடனே திருப்பி வழங்கி மீனவர்களின் வாழ்வாதரத்திற்கு உத்தர வாதம் அளிக்க வேண்டும் என்றார்.