வவுனியாவில் தோட்டத் தொழிலாளியின் மகளின் சாதனை : மனதை நெகிழவைக்கும் சம்பவம்!!

636

வவுனியா மூன்றுமுறிப்பு அதக பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி ராம்ராஜ் யாழினி (8A,C) பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவியின் தந்தை நுவரெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் தோட்டத் தொழிலாளியாக கூலி வேலை செய்துவருகின்றார். தாயார் இல்லத்தரசி.

இம்மாணவிக்கு நான்கு சகோதரர்கள் இவரே மூத்தவர். குடும்ப வறுமையின் காரணமாக வவுனியாவில் உள்ள இவரது உறவினரின் வீட்டிலிருந்தே கல்வி பயின்று வருகிறார். 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தான் வைத்தியராகி வறுமையில் வாழும் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்பதை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளார். எனினும் தனது மேற்படிப்பை தொடர முடியுமா என்ற கேள்வியும் தன்னுள் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப வறுமையே இதற்கு காரணம் என்கின்றார். ஆனாலும் தான் தன் கல்வியை கைவிடமாட்டேன் என்றும் தனது குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்றும் அம்மாணவி கூறுகையில் அருகில் இருந்தோரின் கண்களில் கண்ணீர் மல்கியதை காணக்கூடியதாக இருந்தது.