காணாமல் போன சிறுமி மர்மமான முறையில் மரணம்!!

543

girl

பிரான்சில் காணாமல் போன 5 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற அன்று 5 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தார் மற்றும் பக்கத்து வீட்டாருடன் பூங்காவிற்கு சென்றுள்ளார்.

அப்போது தனது தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்த இவர் திடீரென காணாமல் போகவே தாயார் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணையில் பெற்றோர்கள் குடித்துவிட்டு குழந்தையை கவனிக்காமல் இருந்த சமயம் குழந்தை காணாமல் போயுள்ளது தெரியவந்தது.

மேலும் குழந்தையை கடத்திய கும்பல் யார் என விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில் பிரான்சில் உள்ள செலமோரண்ட் பெராண்ட் என்னும் இடத்தில் அச்சிறுமியின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



தற்போது குழந்தை எவ்வாறு இறந்தது என்றும் கடத்தியவர்கள் யார் எனவும் பொலிசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.