வௌ்ளப்பெருக்கில் மூழ்கிய நகரம்!!

861

அவுஸ்திரேலியாவில் பெய்துவரும் தொடர் மழையுடன் கூடிய வௌ்ளப் பெருக்கினால் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பசுபிக் சமுத்திரத்தில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த வௌ்ள பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த தாழமுக்க நிலைமை காரணமாக அவுஸ்திரேலியாவில் 40 சென்றீ மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொடர் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்றமையினால் குயின்ஸ்லாந்து பகுதியில் வௌ்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் வௌ்ள பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ​போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால் சுமார் இரண்டாயிரம் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அத்துடன், அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைககள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 50 பேர் வரை சிக்குண்டுள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்பு பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.