வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு!!

253

வவுனியாவில் இன்று (31.03.2017) பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து மகாகச்சக்கொடி செல்லும் வீதியில் இன்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்போது வயல் உரிமையாளர் மோட்டார் குண்டு ஒன்று தமது வயலில் இருப்பதைக் கண்டுள்ளார்.

இதையடுத்து மடுக்கந்த பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் நீதிமன்ற அனுமதி பெற்று விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன்; கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டினை செயலழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தார்.