வவுனியாவில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!

1403

வவுனியாவில் நேற்று (31.03) பிற்பகல் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணு வீரரை கையும் மெய்யுமாக பொலிசார் கைது செய்துள்ளர்.

நேற்று பிற்பகல் பேருந்து நிலையத்தில் தம்புள்ளை பகுதியைச் செர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 100 கிராம் 700 மில்லி கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டள்ளார்.

குறித்த இரணுவ வீரர் ஏற்கனவே கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவரை விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பவுள்ளனர்.