இன்னும் சிகரட் புகைக்கும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட இளைஞர்களினால் இன்று (01.04.2017) விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது.
வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து காலை 10 மணிக்கு ஆரம்பமான இவ் விழிப்புணர்வுப் பேரணி வவுனியா நகரை வலம்வந்தது.
குறிப்பாக வவுனியா மத்திய பேரூந்து நிலையம், மத்திய சந்தை, பஜார் வீதி, குருமன்காடு, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் இவ் விழிப்புணர்வுப் பேரணி சென்றது.
இப்பேரணியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம், சுவரொட்டிகளை ஒட்டினர்.

























