கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ் மாவட்ட கிறிஸ்தவ மத போதகர்களுடன் கலந்துரையாடல்!!

854

 
கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ்.இராதாகிருஷ்ணன் யாழ் மாவட்ட விஜயத்தின் போது வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் கலாநிதி.எஸ்.சந்திரகுமாரின் ஆலோசனைக்கிணங்க யாழ் மாவட்ட கிறிஸ்தவ மத போதகர்களின் ஐக்கியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மத போதகர்கள், நிர்வாக உறுப்பினர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடல் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதியில் அமைந்துள்ள ஏஞ்சல் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் சுமார் 150 மத போதகர்கள், கிறிஸ்தவ பாடத்திற்கான ஆசிரியர்கள் மற்றும் கல்விமான்கள், சமூகவியலாளர்கள், கல்வி ஆசான்கள் ஒன்று சேர்ந்து யாழ் மாவட்டத்தின் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை சம்மந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.