வடமாகாண ஆளுனர் மன்னார் ஆயர் இல்லத்தில் முள்ளிக்குள மக்களின் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்!!

607

 
நேற்று (31.03.2017) வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் முல்லை மாவட்ட கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் பிராந்திய முகாமையாளருமான கலாநிதி எஸ்.சந்திரகுமார் தலைமையில் வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே அவர்களை மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தின் குரு முதல்வர் சிலாவத்துறை பங்குந்தந்தை, இலங்கை செஞ்சிலுவைச்சங்க தலைவர் சந்தித்து முள்ளிக்குள மக்கள் தமது பூர்வீக நிலங்களை பெறுவதற்காக போராட்டம் தொடர்பாக கலந்துரையாடலும் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது மன்னார் அப்போஸ்தல பரிபாலகர் மேதகு வணக்கத்துக்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மேற்படி மக்களின் போராட்டம் தொடர்பாக இலங்கை அதிமேதகு ஜனாதிபதி அவர்கட்கு எழுதிய கடிதம் ஒன்றை ஆளுநரிடம் கையளித்தனர்.