வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 7 ஆம் நாள் வசந்த உற்சவம் !(படங்கள்,வீடியோ!)

1048

வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம் நாளான நேற்று 01-04 -2017 சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின் பின் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர் .

மாலை வசந்தமண்டப பூஜையின் பின் அமிர்தவர்ஷினி தீர்த்த கரைக்கு விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப வாகனதிலும் எழுந்தருளியிருந்தனர் .பின்னர் தீர்த்தக்கரையில் மன்மதன் ரதிக்கான அபிசேகங்கள் இடம்பெற்று திருபொற்சுண்ணம் முதலியவை பாடப்பட்டு பக்தர்கள் தீர்த்தக்கரையில் இறைவனை நோக்கி கற்பூரம் கொளுத்தி விடுகின்ற அருமையான வசந்த உற்சவம் இடம்பெற்றது. தொடர்ந்து திருவீதி உலாவந்து வசந்த உற்சவம் நிறைவு பெற்றது .