வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் (31.03.2017) இரவு பாடசாலை நிகழ்வு ஒன்று மடுக்கந்த பகுதியில் நடை பெற்றுக்கொண்டிருந்தபோது அந்தப்பகுதிக்குச் சென்ற அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த மாணவன் மாணவியுடன் நீண்ட நாட்களாக நட்பு ரீதியில் பழகிவந்துள்ளார் என விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குறித்த மாணவனைக் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்டவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.