இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி பிரித்திகா யாசினிக்கு, தருமபுரியில் துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. ஆணாக பிறந்த இவர் தனது 20வது வயதில் தன்னிடம் பெண் தன்மை இருப்பதை உணர்ந்து மருத்துவ சிக்ச்சை மூலம் திருநங்கையாக மாறினார்.
பின்னர் பி.சி.ஏ பட்டபடிப்பை முடித்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானது.
அதற்கு விண்ணப்பித்த பிரித்திகா திருநங்கை என்ற காரணத்தால் நிராகரிக்கபட்டார். பின்னர் நீதிமன்றம் மூலம் அவர் தேர்வு எழுத அனுமதி பெற்றார். பின்னர் நடந்த தேர்வில் பிரித்திகா தேர்ச்சி பெற்றார்.
அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதையடுத்து கடந்த ஒரு வருடமாக தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையான பிரித்திகா உட்பட 1031 பேர் துணை ஆய்வாளர் பயிற்சி பெற்றனர்
தற்போது பயிற்சி முடிந்ததையடுத்து தற்போது பிரித்திகா தர்மபுரியில் துணை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற பெயருக்கு பிரித்திகா சொந்தகாரராகி உள்ளார்.







