ஹரியானாவில் நடன அழகிகளுடன் ஜெயலின் உள்ளே ஆட்டம் போட்ட பொலிசாரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள சிறையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின் போது வெளியிலிருந்து நடன பெண்களை அழைத்து வந்து பொலிசாரும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது சீருடையுடன் நடனமாடும் பொலிஸ் ஒருவர், நடன அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை வீசியதும் இந்த வீடியோ காட்சியில் பதிவானது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில சிறைத்துறை ஐ.ஜி உத்தரவிட்டார்.
விசாரணையின் முடிவில், ஜெயில் உள்ளே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வெளியிலிருந்து பெண்களை அழைத்து வந்த தலைமை ஜெயில் வார்டன் சத்வான் சிங்-ஐ சஸ்பெண்ட் செய்து ஐ.ஜி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.






