விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி : 7 பேர் படுகாயம்!!

965

 
நுவரெலியா – நானுஓயா பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதுடன் ,யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா ஊடாக பொகவந்தலாவை நோக்கி பயணித்தி லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட 7 ​பேரும் இந்த விபத்தினால் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவரது சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.